Monday, December 30, 2019

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 2




இங்கு ஒரு உண்மையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஆம் ! இது யாராலும் மறுக்கமுடியாத உண்மை !

பிரபஞ்சம் வேறு  நாம் வேறு இல்லை.

பிரபஞ்சமும் நாம்தான்.  அதில் இருக்கும் ஒவ்வொரு வடிவமும் நாம் தான்.

என்னடா ! ஒரே தத்துவமாக இந்த வாரம் ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறீர்களா ?
அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். இந்த தத்துவத்தில் தெளிந்து நின்றால் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாவற்றையும் நம்மால் அடைய முடியும். 

நிச்சயமாக முடியும் !

கொஞ்சம் எளிமையாகவே புரிந்துகொள்ள முயற்சிப்போம். சின்னதாக ஒரு கற்பனை . 

ஒரு மலையின் உச்சியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். கண்களை இறுக்க மூடிக்கொண்டு நிற்கிறீர்கள். இப்பொழுது உங்கள் புலன்கள் தான் உணர்வுகளை கடத்தும் ஒரே வழி. அதாவது கண்களை மூடிகொண்டதால் உங்களை சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை பார்க்க முடியாது. ஆனால்  உணர முடியும். சுற்றி இருப்பதை பாவனையாக பார்க்க முடியும். இப்பொழுது கூர்ந்து உங்களை சுற்றி கவனியுங்கள்.

உங்களுக்கு மேலே நீலவானம். உங்கள் பாதம் மலையின் உச்சியில் நிற்கிறது. சில்லென்று காற்று உங்கள் உடலை தழுவிகொண்டு செல்கிறது. அந்த காற்று உங்கள் உடலை தழுவும் போது ஒரு குளிர்ச்சி உடல் எங்கும் பரவுகிறது ?

சரி அடுத்த விஷயத்தை கவனிப்போம்.  

இப்பொழுது,உங்களுக்குள் நீங்கள் இழுத்துவிடும் சுவாச காற்றும். வெளியே உங்கள் உடலை வருடும் இனிமையான அந்த தென்றல் காற்றும் ஒன்றுதானே ? 

இது வேறு ? அது வேறு என்று சொல்ல முடியுமா ? 

வெளியில் வீசும் காற்றும் முற்றிலும் நின்றுவிட்டால் சுவாச காற்றும் நின்றுவிடும் அல்லவா ? உள்ளும் புறமும் இருக்கும் காற்று எப்படி ஒன்றோ ? அதே போன்று பிரபஞ்சமும் நீங்களும் ஒன்றேதான். இது தான் பிரபஞ்சம் சொல்லும் சேதி.


சரி இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்ப்போம்.

 உங்கள் மூச்சையே திரும்பவும் கவனியுங்கள். ஒரு ஆனந்தமான அதிர்வலைகள் உங்கள் உடல் முழுவதும் பரவுவதை உணரமுடிகிறது. உங்கள் மூச்சை நீங்கள் நன்றாக கவனிக்க முடிகிறது. நன்றாக.....மிக நன்றாக......நீங்கள் மூச்சை உள்ளிழுத்து விடுகிறீர்கள். அது உடல் முழவதும் உள்ள கோடிக்கணக்கான அணுக்களில் ஊடுருவி அதற்குள் ஒரு சுழற்ச்சியை உண்டாக்குகிறது. வெளியே பூமி சுழன்றுகொண்டிருக்கிறது. 

சுழன்றுகொண்டிருக்கும் பூமியில் நிலையாக நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நிலையாக நின்றுகொண்டிருக்கும்பொழுதும் உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்குள் ஒரு சுழற்சி நடைபெற்றுகொண்டிருக்கிறது. 

இந்த அனுபவத்தை என்றாவது  யோசித்து பார்த்திருக்கிறோமா ? 

உங்களுக்குள் உள்ளும் உங்களுக்கு புறமும் நிகழும் சுழற்சி ஒன்றெனில் நீங்களும் அதுவும் ஒன்றுதானே. நீங்கள் அதுவாகிறீர்கள். அது நீங்களாக இயங்கிகொண்டிருக்கிறது.

பிரபஞ்சம் சொல்லும்  உண்மை என்ன ? நீ வேறு நான் வேறு அல்ல.

அடுத்து இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்ப்போம்.

இப்பொழுது உங்கள் உடலை நினைத்துகொள்ளுங்கள். உங்கள் உடல் இந்த வெட்டவெளியில் நிற்கிறது. திடீரென்று உங்கள் உடல் கரைந்துவிட்டால் அங்கு என்ன இருக்கும் ? அதே வெட்டவெளிதான். நீங்கள் இருப்பீர்கள். வெட்டவெளி இருக்கும். ஆனால் உடல் இருக்காது. அதாவது உடலற்ற நீங்கள் வெட்டவெளியோடு வெட்டவெளியாக இருப்பீர்கள். இப்பொழுது சொல்லுங்கள். 

நீங்கள் வேறு பிரபஞ்சம் வேறா ? 

பிரபஞ்சம் பேசும் மொழி நீங்கள் பேசும் மொழி இரண்டும் ஒன்றுதான்.  அப்படியெனில் பிரபஞ்சத்துக்கு ஆட்பட்ட எல்லாமும் உங்களுக்கு ஆட்பட்டது. பிறகு ஏன் பல விஷயங்கள் நமக்கு கிடைக்காதது போல் நாம் நினைத்து கவலையில் உழல்கிறோம்.

பதில் மிக எளிது. பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக நாம் இயங்கிகொண்டிருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு இன்றி இயங்கிகொண்டிருக்கிறோம். 

நாம் புலன் வழியில் சிந்திக்கிறோம். புலன் வழியில் செயல்கிறோம். நமக்கு தெரிந்த வாழ்க்கையில் இன்பம் என்றால் அது புலனின்பம் மட்டுமே. 

ஆனால் நாம் நம்மை சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்புணர்வோடு அணுகும்பொழுது ஒரு விழிப்பு நிலையில் மட்டுமே நிகழ் அனுமதிக்கும்பொழுது நம்மை சுற்றி எல்லாம் நம் கட்டுபாட்டில் இயங்க தொடங்கும். இது தான் இயற்கையின் விதி.

அதாவது உங்களை சுற்றும் நிகழ்வை நீங்கள் விழிப்புணர்வுடன் கவனிக்கிறீர்கள் எனில் அது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்று அர்த்தம்  . முதலில் சிறிய விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிறகு எல்லா விஷயங்களையும் அதன் நியதிக்குட்பட்டு கட்டுபடுத்தும் ஆற்றல் உங்களுக்குள் தானாக வரும். பின்னர் பிரபஞ்சத்தோடு இணைந்து செயல்படும் திறன் மிகும். பின்னர் பிரபஞ்சமாகவே மாறி நிற்பீர்கள். 
மொழி தெரியாத ஒரு நாட்டிற்கு வேலைக்கு செல்கிறோம் . அங்கு இருப்பவனும் மனிதனே.நாமும் மனிதர்களே. இருவருக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால்  இருவரும் ஒரே நிலையில் செயல்படுவோம் அல்லவா ? அதே போல் நாம் வேறு பிரபஞ்சம் வேறு என்ற நிலையை உணர பொதுவாக ஒரு மொழி அவசியம். அது பிரபஞ்ச மொழி. அது என்னவாக இருக்கும் ?

பாத்திரம் அடைந்து பிச்சையெடு என்றார்கள் பெரியவர்கள்.
நாம் பிரபஞ்ச ஷக்தியை முழுவதும் உணர நமது பாத்திரத்தை தகுதியாக்குவோம்…

( பிரபஞ்சம் பேசும் ....)







நம்ம ஊரு Life Coach
கணியன் பூங்குன்றனார்.
பிரதமர் மோடி முதல் குக்கிராமத்தில் பாடமெடுக்கும் அரசு வாத்தியர் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒரு உதாரணம் " யாதும் ஊரே யாவரும் கேளீர் " " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என ஆரம்பிக்கும் புறநானுற்றுபாடல். உலகம் ஒன்றுதான். நமக்கு ஏற்படும் விளைவுகளுக்கு நாமே காரணம் என்பது இதன் பொருள். இன்று Law of Attraction, Cosmic Theory, Cause and Effects, Success Formula என்று எண்ணற்ற வகுப்புகள் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மந்திர சொற்களின் மூலம் கணியன் பூங்குன்றனார் சொல்ல வந்த வாழ்வியல் நியதியை சொல்லிவிட்டார்.  இதை ஒவ்வொருவரும் உணர்ந்து இயங்கினாலே உலகில் போர்பகை, அச்சம்.உயர்வு தாழ்வு மனப்பான்மை வராது.எல்லோரும் சமம் என்பதுதான் அவர் சொல்லும் தாரகமந்திரம். " பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ( புறநானுறு : 192 ). என்ன அற்புதமான வார்த்தைகள் பாருங்கள். வழக்கமாக பெரியோரை போற்றுங்கள் சிறியோரை போற்றாதீர்கள் என்று தான் அறநூல் சொல்கின்றன. இவர் பெரியோரை வியத்தலும் இலமே என்கிறார். நீ ஒரீடத்தில் பெரியவர் இவர் என்று நினைத்து அவரை புகழ்வதும் தவறானது . ஏன் எனில் அங்கு அவரை விட சிறியவர் ஒருவர் இருக்கலாம். இந்த புகழ்ச்சி அவருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மை தரலாம்.அதனால்  பெரியோரை வியத்தலும் வேண்டாம் எளியோரை இகழ்தலும் வேண்டாம் என்று உள்ளத்தூய்மைக்கு வழிசொல்லிறார் பல நூற்றாண்டுகளை கடந்தும் வாழும் இந்த Life Coach.



இந்த வார வழிகாட்டுதல் 
சுவாமி சிவானந்தர் எழுதிய " எண்ணம்"

திருநெல்வேலிக்கு அருகே பத்தமடையில் பிறந்து உலகின் புகழ்பெற்ற மருத்துவராக உயர்ந்தவர் சுவாமி சிவானந்தர். மலேயா நாட்டில் மருத்துவ தொழிலில் கொடிகொட்டி பறந்துகொண்டிருந்த சிவானந்தருக்கு ஏற்பட்ட ஆன்மீக உந்துதல் அவரை இமயத்திற்கு பயணப்பட தொடங்கியது. இமயம் எனது தந்தை கங்கை எனது தாய் என்று ஆன்மீக பிரகடம் செய்து டிவைன் லைப் சொசைட்டி எனும் அமைப்பின் மூலம் அறவாழ்வில் சேவையாற்ற தொடங்கினார் சிவானந்தர். நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதியுள்ள சுவாமி சிவானந்தரின் மாஸ்டர் பீஸ் என்றால் " எண்ணம்" எனும் நூல். மனிதனின் அகவழி அல்லது புறவழி வெற்றிக்கு அடிப்படை காரணமாக இருப்பது எண்ணம். அந்த எண்ணத்தின் இயக்கத்தை அறிந்துகொண்டால் எதையும் எளிதில் வெற்றிபெறவும் , துன்பம் ஏற்படின் அதில் இருந்து எளிதில் வெளியேறவும் முடியும். எண்ணம் என்ற இந்நூல் எளிமையாக பாமரரும் புரிந்தகொள்ளும் விதமாக எண்ணத்தை செயல்பாட்டை விளக்குகிறது. உங்களை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால் நிச்சயம் இந்த நூல் அதற்கு உதவும்.




உங்கள் பட்டியல் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும். அதனை வைத்துகொண்டு சரிபாருங்கள். இவையெல்லாம் எங்கு கிடைக்கும் என்று.




பிரபஞ்சம் பேசும் மொழி நீங்கள் பேசும் மொழி அப்படியெனில் பிரபஞ்சத்துக்கு ஆட்பட்ட எல்லாமும் உங்களுக்கு ஆட்பட்டது. பிறகு ஏன் பல விஷயங்கள் நமக்கு கிடைக்காதது போல் நாம் நினைத்து கவலையில் உழல்கிறோம்.

பதில் மிக எளிது. நாம் புலன் வழியில் சிந்திக்கிறோம். புலன் வழியில் செயல்கிறோம். நமக்கு தெரிந்த வாழ்க்கையில் இன்பம் என்றால் அது புலனின்பம் மட்டுமே.

ள்


கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
உணர்ந்தவர்கள் வெளியே சொல்லமாட்டார்கள்
வெளியே சொல்பவர்கள் எல்லாம் உணர்ந்தவர்கள் இல்லை. 



நம்ம ஊரு Life Coach
கணியன் பூங்குன்றனார்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)


இந்த வார வழிகாட்டுதல் நூல்

பிரபஞ்சம் பேசுகிறது -பகுதி - 1



நீங்கள் யாரோ ஒருவரை பார்க்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துகொண்டிருக்கிறீர்கள். அவர் நீங்களே எதிர்பாராத சூழலில் திடீரென்று உங்கள் முன் வந்து நிற்கிறார். 

உங்களுக்கு எப்படி இருக்கும் ?

நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று ஆவல்கொண்டுள்ளீர்கள்.ஆனால் சந்தர்ப்ப சூழலால் அதை வாங்க முடியாமல் தள்ளிகொண்டே போகிறது. திடிரென்று ஒருநாள் உங்களுக்கு தெரிந்த  ஒருவர் நீங்கள் விரும்பிய பொருளை பரிசாக கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்கிறார்.

நீங்கள் எப்படி உணர்வீர்கள் ?

இது என் நண்பனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவம். 

அவனுக்கு ஒரு நல்ல Hatch Back கார் வாங்கவேண்டும் என்பது  நீண்டநாள் ஆசை. ஆனால் அவன் சம்பாதிக்கும் பணத்திற்கு அது உடனடியாக சாத்தியமில்லை. பயன்படுத்திய ஒரு காரை வாங்கவேண்டுமானால் கூட கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்தால் மூன்று வருடம் ஆகலாம். ஆனால் நண்பனின் ஆசை அடங்கவில்லை. அவன் எப்பொழுதும் சிந்தித்துகொண்டே இருந்தான். அவனுக்கு பிடித்தமான அந்த காரை சாலையில் பார்த்தால் கூட அவனுக்கு மகிழ்ச்சி பொங்கும். ஒருநாள் இது போன்றதொரு கார் வாங்கியே தீருவேன் என்ற எண்ணம் அவனுக்குள் வலிமைப்பெற்றுகொண்டே இருந்தது . அவனின் பிரார்த்தனையில் அந்த கார் வாங்கவேண்டும் என்பது நிச்சயம் இடம்பெற தொடங்கியது. எப்படியும் அவன் எப்படியும் கார் வாங்கியிருப்பான் என்று உங்களுக்கு தோன்றும். உண்மைதான். ஆனால் அவனுக்கு கார் கிடைத்தவிதம் தான் அலாதியானது. 
ஒரு இரண்டு மாதம் அவனை நைஜிரியாவுக்கு ஆன்சைட் பணிக்காக அனுப்பினார்கள். அங்கு சென்ற பின்னரும் அவனுக்கு அந்த எண்ணம் குறையவில்லை. அங்கு அவனுடன் நிறைய இந்தியர்கள் இருந்தார்கள். ஒருநாள் பேசிகொண்டிருக்கும் பொழுது அவனுடைய பாஸ் அவனிடம் சொன்னார் " எப்படியும் அடுத்த மூன்று வருடம் நான் இங்கேயேதான் இருக்கவேண்டும். நான் புதிதாக வாங்கிய பிளாட்டை வாடகைக்கு விட்டுவிடலாம். ஆனால் கார் ஒன்று இருக்கிறது. அதனை விற்கவிரும்புகிறேன். நீ எடுத்துகொள்கிறாயா  ? என்றார். நண்பனுக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியும். பயன்படுத்திய கார் விற்கும் கடையில் கேட்டால் கூட கிடைக்காத மலிவு விலை. அடுத்து அவர்கள் இருவரின் ஒப்பந்தத்தின் படி நண்பன் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்தால் போதும் என்ற ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட். நண்பன் நியாயமானவன் என்பதால் இருவரும் ஒப்புக்கொண்டனர். மகிழ்ச்சியுடன் இந்தியா திரும்பிய நண்பனின் கையில் அவன் விரும்பிய காரின் சாவி. போனஸாக குறைந்த வாடகையில் அவன் மேலதிகாரியின் வீட்டிலும் வாசம். சிங்கிள் அறையில் நண்பர்களோடு தங்கியிருந்த அவன் வாழ்க்கை ஒரு சில நாட்களில் மாறிப்போனது. இன்னும் சொல்லபோனால் மூன்று வருடம் கழித்து கார் வாங்கவேண்டும் என்ற அவனின் இலக்கு ஒரு வருடத்திற்குள்ளாகவே நிறைவேறிவிட்டது.

இது கடவுளின் கருணையா ?
எண்ணத்தின் வெற்றியா ? 
அல்லது யதேச்சையாக நடந்திருக்குமா ?

நம்ம ஊர் மக்கள் அவனுக்கு நல்ல நேரம் என்பார்கள். கடவுள் கருணை காட்டினார் என்பார்கள். மேற்கத்தியர்களை கேட்டால் Law of Attraction வேலை செய்திருக்கிறது என்பார்கள். இதை எத்தனை வகையில் கூறினாலும் ஒன்றே ஒன்றுதான் அங்கு பிரபஞ்ச விதி செயலாற்றியிருக்கிறது.

பிரபஞ்சம் அளப்பறியது.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று விவிலியம் சொல்வது இதைதான்.

நாம் எதை விரும்புகிறோமோ அதனை அடையமுடியும். இங்கே ஒரே ஒரு கட்டுபாடுதான். அதை பெறுவதற்கு தகுதியானவராக இருக்கவேண்டும். பிரபஞ்சத்திடம் எப்படி கேட்பது ? பிரபஞ்சத்தை எப்படி செவிசாய்க்க வைப்பது. அது உங்களை நீங்கள் தகுதியானவராக மாற்றிகொள்வதில் தான் இருக்கிறது.

இன்றைய தேதியில் அதிகம் விற்பனை ஆகும் நூல்கள். சமையல், ஜோதிடத்தை தாண்டி தன்னம்பிக்கை நூல்கள். மக்களால் அதிகமாக கலந்துகொள்ளப்படும் பயிற்சி வகுப்புகள் Life Coaching எனப்படும் தன்னம்பிக்கை வகுப்புகள். இவையெல்லாம் சொல்லும் மந்திரம் ஒன்றே ஒன்றுதான் நினைத்தது நடக்கும் ! கேட்பது கிடைக்கும் !

நீங்கள் காந்தமாக மாறுங்கள்.
உங்கள் ஈர்ப்புசக்தியை அதிகரித்துகொள்ளுங்கள்
விரும்பியதை ஈர்ப்பது எப்படி ?
நீங்கள் கோடீஸ்வரனாக வேண்டும்.

இன்னும் பல பல தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்கள் கோடிக்கணக்கான பிரதிகள் தினமும் விற்றுதீருகின்றன. வட அமெரிக்கா முழுவதும் இத்தகைய எழுத்தாளர்கள் பெருகி நிற்கின்றன. நம்ம ஊரு தினசரிகளில் நீங்கள் பார்க்கலாம் கோட்டு சூட்டுடன் அவர்களின் படங்களை போட்டு  குறிப்பிட்ட நட்சத்திர ஹோட்டலில் குறிப்பிட்ட நிகழ்ச்சி என்று கீழே சில ஆயிரங்களையாவது அனுமதி கட்டணமாக குறிப்பிட்டு இருப்பார்கள்.

உண்மையில் இந்த பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் கோடீஸ்வரனாக மாறுகிறார்களோ இல்லையோ. இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கோடீஸ்வரராகிவிடுகிறார்கள். இதுவும் அவர்களுக்கான பிரபஞ்ச விதி தான்.  இவர்கள் விதவிதமான பெயர்களில் வகை வகையான விதங்களில் வகுப்புகளை நடத்தினாலும் இவர்கள் அனைவரும் சொல்லும் எளிய மந்திரம் " பிரபஞ்சத்துடன் பேசுங்கள் "

பிரபஞ்சம் என்பது எல்லையற்றது. பிரபஞ்சம் போன்றே மனமும் எல்லையற்றது. நாம் எதைவிரும்பினாலும் நமது மனமும் பிரபஞ்சமும் ஒத்த அலையியக்கத்தில் இயங்கும் பொழுது நாம் விரும்பியது நம்மை நோக்கி வருகிறது. நாம் கேட்டதெல்லாம் கிடைக்கிறது. நினைத்தது எல்லாம் நடக்கிறது.  

இதனை எப்படி செய்வது ? வாருங்கள் பிரபஞ்சத்திடம் கேட்போம் !


நம்ம ஊரு Life Coach  - திருவள்ளுவர் 

இன்று உலகம் முழுவதும் ஏன் ஊருக்கு ஊர் தன்னம்பிக்கை பேச்சாளர்களும் வாழ்வியல் நிபுணர்களும் நிரம்பி வழிகின்றனர். ஆனால் இவர்களுக்கு எல்லாம் மாஸ்டர் பீஸ் நம்ம ஊரில் இருந்திருக்கிறார்கள்.அவர்களின் படைப்புகளும் வழிகாட்டுதல்களும் இன்னும் இருக்கின்றன.அவர்களில் ஒருவர் திருவள்ளுவர். நீங்கள் திருக்குறளை முழுமையாக உணர்ந்து படித்தீர்கள் எனில் உங்களுக்கு எந்தவிதமான தன்னபிக்கை பயிற்சியும் தேவைப்படாது. ஏன் எனில் உலகில்சொல்லபட்ட கருத்துக்களும். 

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும்

கடவுளினால் ஆகாத செயல்கள் கூட விடாத முயற்சியினால் சாத்தியமாகும் என்கிறார்.

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு''

குளத்தில் தண்ணீர் உயர உயர தாமரை அதற்கு ஈடுதருவது போல் உயர்ந்துகொண்டே இருக்கும். அது போன்று எண்ணம் உயர உயர வாழ்க்கையில் வெற்றியும் உயர்ந்த நிலையில் வந்துகொண்டே இருக்கும்.

" எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்  எண்ணியர் 
      திண்ணியர் ஆகப்பெரின்

நினைப்பதில் உறுதியோடு இருந்தால் நினைப்பது எல்லாம் நடக்கும்.

உலகில் இனி சொல்லபோகும் கருத்துக்களும் திருக்குறளை தாண்டி யோசிக்க முடியாது என்ற வகையில் அனைத்தையும் திருக்குறளுக்குள் உள்ளடக்கிவிட்டார் திருவள்ளுவர். இந்த வகையில் உலகின் மூத்த Life Coach சாட்சாத் நம்ம திருவள்ளுவர்தான். 133 அதிகாரங்கள் 1330 குறள்களில் பெரும்பாலும் தன்னம்பிக்கை தெறிக்கின்றனர். அவற்றில் சில


இந்த வார வழிகாட்டும் நூல்
சுவாமி பக்திவேதாந்த பிரபுபாதாவின்
"தன்னையறிதல் விஞ்ஞானம்"

நமது வாழ்க்கை அகவாழ்வு புறவாழ்வு என்று இரண்டு நிலைகளில் உள்ளது. புறவாழ்வு முழுக்க முழுக்க பொருள் சார்ந்த வாழ்க்கை. அதை நோக்கியே நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். அகவாழ்வு என்பதை முழுவதும் மறந்துவிட்டோம். அகவாழ்க்கையை செம்மைப்படுத்தும்பொழுது புறவாழ்விற்கு உரிய தேவைகள் தானே நிறைவடையும்  என்பது இயல்பூக்க விதி. இதற்கு நமது பிறவியின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அகவாழ்வில் வெற்றி பெற இதுதான் வழி. அதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் அகவாழ்விற்கு வழிகாட்ட எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன.ஆனால் துரதிஷ்வடவசமாக நாம் அதிலிருந்து விலகி விலகி வந்துவிட்டோம். எல்லா தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய முறையில்  வாழ்வியலின் நோக்கத்தை சொல்லும் நூல் " தன்னையறியறிதல் விஞ்ஞானம் " . The Science of Self Realization என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியான நூலின் தமிழாக்கம். உலக முழுவதும் கிருஷ்ண நெறியை போதித்துவரும் இஸ்கானை நிறுவிய சுவாமி அ.ச.பக்திவேதாந்த பிரபுபாதா எழுதிய நூல். சாதாரண குடும்ப வாழ்வில் இருந்து அதனை முழுமையாக நிறைவுபெற்ற ஆன்மீக் வாழ்வில் நுழைந்து அதிலும் முழுமைபெற்றவர். தொடர்ந்து வாசித்தால் மூன்று மணிநேரத்தில் பல வெளிச்சங்களை நமக்குள் பாய்ச்சக்கூடிய நூல் இது.







பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...