Saturday, May 7, 2011

குஷியாய் பெறுவோம் குவா ! குவா ! - ( 2 )

அது என்ன ஹிப்னோபர்த்திங்…!

புதுசா இருக்கே என்ற கேள்வி எழுகிறதா?

சிலர் அவசர அவசரமாக இணையதளத்தில் தகவல் அறிய தேடும் உங்களின் ஆர்வமும் புரிகிறது.

ஹிப்னோபர்த்திங் பற்றித் தெரிந்துக்கொள்ளவேண்டுமெனில் நாம் ஹிப்னாடிசம் பற்றியும் சற்று தெளிவுபெறுவேண்டும்.

அட…! ஹிப்னாடிசமா ? தெரியுமே….! “அந்நியன்” படத்தில் மல்டிபிள் பெர்சனாலிட்டி நோயாளியான விக்ரமை வசப்படுத்தி நாசர் உண்மையை வரவழைப்பாரே அதானே… என்கிறீர்களா ? நீங்கள் சொல்வது மிகவும் சரிதான்.

அது தான் ஹிப்னாடிசம். அதே மனோவசிய கலை சற்று விரிவடைந்து புதிய நுட்பங்களுடன், ஹிப்னோதெரபி எனும் சிகிச்சைமுறையாக மனோத்துவ உலகில் புதிய சாதனைப் படைத்து வருகிறது.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?,நமது உடலில் ஏற்படும் பெரும்பான்மையான நோய்கள் காரணமாக இருப்பது நம் மனம்தான். மனோரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் கவனிக்கப்படாமல் போகும்போது அது உடல்ரீதியான நோய்களாக மாறுகிறது.

உதாரணமாக ஒருவருக்கு சிறு தலைவலி ஏற்படுகிறது. முதலில் வீட்டு வைத்தியம் பார்க்கிறார், குறையவில்லை. பின்னர் அருகில் உள்ள மருந்துக்கடையில் ஏதோ ஒரு மருந்து வாங்கி சாப்பிடுகிறார். வலி நிற்கிறத்!

அப்பாடா..! என்று உட்கார்ந்தால் லிமிடேட் ஸ்டாப் சர்வீஸ் பஸ் மாதிரி திரும்பவும் தலைவலி.அவர் கொஞ்சம் சீரியசாக யோசிக்கிறார். ஏன் ஒரு டாக்டரை பார்க்க கூடாது.

“தலைவலின்னு சும்மா விட்டுடக்கூடாதுப்பா….இப்படி தான் நம்ம காரைவீட்டு கனகத்துக்கு தலைவலி அடிக்கடி வருமாம்…..அவ கண்டுக்காம விட்டுட்டா, இப்ப என்னடான்னா அது பிரைன் கேன்சர்ல வந்து நிக்குது”

ஊர் வாய் வந்தது வியாக்யாணம் என்று பேச,கேட்டவர்க்கு தந்தி அடிக்கிறது.அவரை அறியாமலே அவரின் ஆழ்மனதில் தனக்கு அதுமாதிரி ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயத்தை பதிவாக ஏற்படுத்திக்கொள்கிறார்.

லீவு போட்டுவிட்டு பிக்னிக் போவது போல கட்டுசாதம் கட்டிக்கொண்டு மருத்துவமனை சென்று காத்திருந்து,பல பரிசோதனைகளை செய்து,பர்சிலும் வங்கியிலும் உள்ள சேமிப்புகளை கரைத்து, மருத்துவ பரிசோதனை அறிக்கையை வாங்கி பார்த்தால் ஒண்ணுமில்லை !

என்ன்ணா இது..! இவ்வளவு செலவுப்பண்ணி ஒண்ணுமில்லேனுட்டானே…!” மனைவி கவலைப்பட, “ ஏண்டி….! செலவுபண்ணதுக்காக எனக்கு நோய் இருக்குனுமா.. என்ன ?” என்று கணவன் அலற, கட்டைபிரேம் கண்ணாடி போட்ட டாக்டருக்கே கொஞ்சம் குழப்பம்தான்.

“ஒண்ணு பண்ணுங்க சார்…!” சின்னதா ஒரு டெஸ்ட் பண்ணி,ஒரு சின்னக்கண்ணாடிப் போட்டுக்குங்க….நான் நெனைக்கிறன்….கொஞ்சம் கண்பார்வை கோளாறாலேயும் தலைவலி வரலாம்..அப்படியே இந்த மருந்தும் ஒரு கோர்ஸ் சாப்பிடுங்க “ என்று பில்லடிக்கிறார்.

அப்படி இப்படியென நிற்காத தலைவலியுடன், அடுத்த மருத்துவ பில்லுக்கு பயந்து சிகிச்சையை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும்போது,ஒருநாள் வாய்மொழியாய் கேள்விப்பட்டு ஹிப்னோ சிகிச்சைக்கு போகிறார் அவர்.

ஆழ்நிலைக்கு கொண்டு சென்றதில்,இரண்டு வருடம் முன்பு அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம், அவருக்கு “மன அழுத்தமாக” பதிந்து இருப்பதைக் கண்டறிகிறார் சிகிச்சையாளர்,அதே ஆழ்நிலையில் வைத்து.சில நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கோர்வையாக அவர் ஆழ்மனதில் பதியசெய்து அந்த மன அழுத்தத்தை நீக்குகிறார் சிகிச்சையாளர்.சில நிமிடங்கள்தான் இவர் இயல்புநிலைக்கு வந்து கண்வழித்தால்,தலைவலி போன இடம் தெரியவில்லை. போயே….போச்சு !

உடல் ரீதியான நோய்க்கு கண்டிப்பாக அதற்குரிய சிகிச்சை எடுத்தே தீரவேண்டும். ஆனால் பல உடலியல் பிரச்சனைகளுக்கு மனோரீத்யான சிகிச்சை அல்லது ஒரு பயிற்சி முறை தேவை.

தலைவலி, மன அழுத்தம்தான் என்றில்லை, நாள்பட்ட எந்தவித நோய்க்கும் மனரீதியான காரணங்கள் இருப்பதுதான் உண்மை. நாம் எப்படி ஆறுமாதத்திற்கு ஒருமுறை மருத்துவ உடல் பரிசோதனை செய்துகொள்கிறோமோ, அதேபோல் மனப்பரிசோதனை செய்துகொண்டால் வாழலாம் வளமுடன் !

” என்ன சார்..அப்ப எங்க எல்லாரையும் மெண்டல் என்கிறீர்களா ? சைக்ரியாடிஸ்ட்கிட்ட போக சொல்றீங்க ? “ உங்களின் வினா கேட்கிறது.

இது சைக்ரியாட்ரி அல்ல,சைக்கோதெரபி.

சைக்ரியாட்ரி வேறு,சைக்காலஜி வேறு,சைக்கோதெரபி வேறு.மற்ற இரண்டையும்விட சைக்கோதெரபியின் சிகிச்சைமுறை முற்றிலும் மாறுப்பட்டது. சைக்கோதெரபியின் வலிமயான சிகிச்சை முறைதான் ஹிப்னோதெரபி. வலியில்லாத,வளவளவென அறிவுரைகளில்லாத மருந்தில்லாத மகாமருத்துவ சிகிச்சைமுறைதான் ஹிப்னோதெரபி.

ஹிப்னோதெரபி பற்றி நன்றாக தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் கண்டிப்பா “மனம்” பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

என்னங்க…….. ஹிப்னோ பர்த்திங்ள ஆரம்பிச்சு ஹிப்னோதெரபியில் நிறுத்தினீங்க,இப்ப மனம் பற்றி பேசலாம்னு சொல்றீங்க.

மனம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கும்போது, அதப்பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் இல்லைங்களா ? உங்களுக்கு ஒரு கேள்வி.

மனம் என்றால் என்ன ?

உடம்பில் எந்த பகுதியில் இருக்கு ?

எதன் அடிப்படையில் இயங்குது ?

என்ன எதேதோ பதில் மனதில் ஒடுதா ?

அப்படியே ஒரு பதிலை பிடிச்சு வைங்க,எது சரின்னு அடுத்த பகுதியில பார்ப்போம்.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...