Sunday, July 4, 2021

தமிழும் ஓகமும் !


தமிழ் தேசியத்தின் மூலம் மட்டுமே தமிழினத்தை காப்பாற்றமுடியுமா ?  தமிழ் போன்ற வாழ்வியலோடு பின்னி பிணைந்த ஒரு மொழிக்கு அது அவசியமானது கூட அல்ல. மிக சுலபமாக உலகின் எல்லா மனிதர்களிடமும் ஊடுருவி நிற்க தமிழர் சார்ந்த வாழ்வியலை பரப்பினாலே போதும். உலகின் பெரும்பான்மையான மக்கள் தமிழை தாங்கிகொண்டு செல்வார்கள். தேசியத்தை உருவாக்க செய்யும் முயற்சியைவிட இது மிக மிக சுலபமானது. எளிமையானது.

 

மனித வாழ்க்கை மூன்று கூறுகள் அடிப்படையில் அமைகிறது

 

உடல்

உயிர்

மனம்

 

இந்த மூன்று கூறுகளையும் செம்மைப்படுத்தும் ஆற்றல் கொண்ட மொழிகளில் முதன்மையானது தமிழ்.இன்னொரு கோணத்தில் பார்த்தால் எனக்கு தெரிந்த வரை பழமையான மொழிகளாக வரிசைப்படுத்தப்படும் சீனம்,லத்தீன்கிரேக்கம்,அரபிஹீப்ரு என்று தனித்துவமிக்க பழமையான  இனங்களில் கூட இல்லாத நுட்பங்கள் தமிழின வாழ்வியலில் இருக்கின்றன. மேற்கண்ட பழமையான மொழிகளில் ஒருவேளை இந்த நுட்பம் இருக்கிறது எனில் அதுவும் தமிழின் வழியே சென்றதாக தான் இருக்க கூடும்

 

உடல் என்று எடுத்துகொண்டால் எப்படி உடல்நலனை பாதுகாத்துகொள்வது என்கிற இயற்கைவழி வாழ்வியல் நமது தமிழினத்தின் ஆகப்பெரும் சொத்து. உடல்நலன் மட்டுமல்ல உடல்உயிர்மனம் இம்மூன்று செம்மைப்படும் வழிமுறைகள் தமிழர்கள் வாழ்வியல் மட்டுமே முன்வைக்கின்றன. இதனை காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தி உலகிற்கு பரப்பினாலே தமிழின் வளர்ச்சி வலிமையாக பரவாலாகும்.

 

உதாரணமாக யோகா- அது யோகம் அல்ல. ஓகம் என்கிற சொல்லின் திரிபு என்கின்றனர் அறிஞர்கள். “ யோ” என்ற உச்சரிப்பை விட “ ஓ” என்று  உச்சரித்து பாருங்கள். அடிவயிற்றில் இருந்து காற்று மேலெழுந்து வெளிப்படும். நீங்கள் ஓ என்று உச்சரிக்கும் போது உங்கள் தொப்புள் முதல் நெற்றிவரை உள்ள 4 சுரப்பிகள் அதாவது சக்கரங்கள் எனப்படும் மையங்கள்  ஆற்றல் பெறும்.

 

ஆனால் இந்த ஓகம் இப்பொழுது யார் கையில் இருக்கிறது எத்தனை தமிழர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு பத்துநிமிடமாவது இந்த பயிற்சியை செய்கிறீர்கள். ஆனால் இணையத்தை கிளறுங்கள் எத்தனை வெள்ளைக்காரிகள் இதனை ஆங்கிலத்தில் உச்சரித்து பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா இந்த ஓகப்பயிற்சிகளை தமிழில் உச்சரித்து பயிலும் போது மட்டுமே 100% பலன் தரும். தமிழின் சில உச்சரிப்புகளுக்கு மட்டுமே உடலில் உள்ள சுரப்பிகளையும்சக்கரங்களையும் ஆற்றல்படுத்தும் தன்மை இருக்கிறது. இந்த தொடர்பை வலிமைப்படுத்தி அதிகம் பரப்பவேண்டும்.

 

அதே போன்று வாழ்வியலில் உணவும். இயற்கை மருத்துவமுறைகளும் தமிழர்கள் கொண்டாடிய அளவிற்கு உலகம் முன்னேறவில்லை. உலகின் உணவுப்பட்டியல் எல்லாம் ருசிக்காகவும்பசிக்காகவும் மட்டுமே. ஆனால் ருசிபசி அதனை தாண்டி ஆரோக்கியமான உணவு முறை தமிழர்கள் உணவில் மட்டுமே இருக்கிறது. அறுசுவை உணவிற்கும் உடலின் பஞ்சபூத தன்மையை சரியாக பராமரித்துகொள்வதற்கும் தொடர்பு இருக்கிறது. அதே போன்று மனவள மேம்பாட்டினையும் தமிழ்வழியே மட்டுமே சிந்திக்க முடியும்.

 

இப்படி வாழ்வியலின் அடிப்படையாக இருக்க கூடிய முக்கிய மூன்று கூறுகள் தமிழில் மட்டுமே சாத்தியம். ஆனால் இவை அனைத்தும் சாத்தியமற்ற பலமொழிகள் எடுத்து தங்கள் மொழி வழியே கையாண்டுகொண்டிருக்கின்றன.

 

தமிழ் வழியே ஓகம் பயில்வோரை விட ஆங்கில வழியில் பயில்வோர் அதிகம். அதுவும் ஆசிரியர் நேரடியாக இல்லாமல். இணையவழி அதிகம்.

 

தமிழுக்கும் வாழ்வியலுக்கும் இடையே உள்ள உயிர்தொடர்பு குறித்து ஆய்ந்து தமிழ்வழியே இதனை பயில்வதால் ஏற்படும் உண்மையான பலனை திரும்ப திரும்ப எடுத்து சொன்னால் போதும் தமிழ் மொழி தானே எங்கும் நிலைத்து நிற்கும். இது  ஒரு உதாரணம்தான். இது போன்று தமிழுக்குள் ஆயிரம் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.


அவற்றை உணர்ந்து அனுபவித்து பின்னர் பரப்புரை செய்யவேண்டும்.

 

இதில் இருந்து மாறுபட்டு தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்ற பெயரில் முன்வைக்கப்படுபவை எப்பொழுது சாத்தியமாகும் என்று கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை. 339 சாதிகள் உள்ளடக்கிய இந்த இந்த மாநிலத்தில் இத்தனைபேரும் ஒற்றுமையாகி ஒரு தேசியத்தை நோக்கி நகர்வதைவிட மிக சுலபமானது தமிழர்தன் வாழ்வியல் செழுமியங்களை உலகம் முழுவதும் பரப்புவது. அதற்கு முக்கிய தகுதி நீங்கள் இதனை அனுபவித்து மகிழவேண்டும். 


அதற்கு பெரும் முயற்சி தேவை. அந்த முயற்சி செய்வது அத்தனை சுலபமானது.  குறிப்பாக சமூக ஊடகத்தில் ஒரு ஸ்டேடஸ் போடுவது போன்று எளிமையானது அல்ல. அதற்கு உடலும் மனமும் வணங்கவேண்டும்.



உடலையும் மனதையும் ஒழுங்குசெய்யும் ஒருவனால் மட்டுமே தமிழ் வாழ்வியலில் இருப்பவனாக இருக்க முடியும்.

 

 

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...