ஐ
யின் வெற்றிக்கு எமி ஜாக்சன்
என்ற ஒற்றை அழகி போதும்.
"ஐ
"ஸ்கீரிம்
உருகும் கண்களும் காந்தப்புன்னக"ஐ”யும்
ஐ – க்கு செலவழித்த பிரமாண்டங்களை
எல்லாம் தூக்கி சாப்பிட்டு
விடுகின்றன.
ஐ-
யின்
அசத்தல்கள்.
அழகும்
அகோரமும் தாண்டி நிற்பதுதான்
உண்மை காதல் என்ற ஒற்றை வரிதான்
ஐ.
இந்த
ஒற்றை வரிக்கதையை வைத்துக்கொண்டு
பிரமாண்ட பேண்டஸியை
கொடுத்திருக்கிறார் இயக்குனர்
ஷங்கர்.
இயக்குனர்
ஷங்கருக்கு ஒரு பூங்கொத்து.
கதையின்
உயிர்நாடியே விக்ரம் தான்.
அந்த
அகோரமான மேக்கப்பையும் மீறி
காதல்,
சோகம்,
ஆக்ரோஷம்
என கலந்துகட்டி மெர்சலடிக்கிறார்.
அதுவும்
இந்த வயதில் ஜிம்முக்கு போய்
உடற்கட்டை ஏற்றி இறக்கி.
விக்ரம்
சார் நிச்சயம் உங்களின் உழைப்புக்கு
உண்டு பலன்.
அடுத்து
ஜில்ஜில் ஏஞ்சல் !
எமி
ஜாக்சன்.
ஒல்லி
பெல்லி.
அந்த
பார்வை....அந்தப்
புன்னகை...அந்த
நடை....அந்த
நளினம்....அட
போங்க பாஸு !
மார்கழி
குளிரெல்லாம் இதுக்கு முன்னாடி
ஜு ஜு பி.
இது
எல்லாம் பிளாஷ்பேக்கில்தான்.
ஆனால்
கடத்தபட்ட பின்பு நடிக்க
பெரிய ஸ்கோப் இல்லை.
எமிக்கிட்டே
எல்லாம் நடிப்பை எதிர்பார்க்கலாமா
?
இருந்தாலும்
முயற்சி செஞ்சிருக்கார்.
இறுதியில்
அகோரமானால் என்ன ஐ லவ் யூ
Still !
என்று
விக்ரமை கட்டிக்கொண்டு அவரை
சரிபடுத்த மெனக்கெடுகிறார்.
ஏதோ
பழைய புரதான நாடகத்தில்
இதுபோன்ற ஒன்றை பார்த்த
ஞாபகம்.
ஒளிப்பதிவு
கூல் !
கூல்
!
இந்தியாவின்
டாப் பத்து ஒளிப்பதிவாளர்களை
எடுத்துகொண்டீர்களெனில்
அதில் எட்டு பேர் இவரின்
சீடர்களாகதான் இருக்கவேண்டும்.
அவர்
வேறு யாராக இருக்க முடியும்.
அவர்தான்
பி.சி.ஸ்ரீராம்.
இவரின்
சீடர்கள் முப்பத்திரெண்டு
அடி பாய்ந்துகொண்டிருக்க
அதைவிட அதிகமாக ஒவ்வொரு
படத்திலும் பாய்ந்துகொண்டிருக்கிறார்.
போர்
அடிக்கும் காட்சிகளில் எல்லாம்
இவரின் ஒளிப்பதிவும் அழகியலும்
தான் காப்பாற்றுகின்றன.
நான்கு
லைட் கொடுத்தாலே மனுஷன் பின்னி
பெடலெடுப்பார்.
இப்படி
ஒரு பிரமாண்டமான படத்தைப்
பற்றி கேட்கவேண்டுமா என்ன
?
இவருடன்
சேர்ந்து ஆர்ட் டைர்க்டருக்கும்
ஸ்டண்ட் இயக்குனருக்கும்
நிச்சயம் ஒரு சலாம் போடவேண்டும்.
உயிரை
கரைத்து உழைத்து இருக்கிறார்கள்.
இப்படி
பல அசத்தல்கள் இருந்தாலும்
பல பொத்தல்களும் இருக்கின்றன.
ஏ.ஆர்.ரகுமான்
சார் உங்களுக்கு தேவை சின்ன
பிரேக்.
“ஐ “
மீன் இடைவெளி.
ரெஸ்ட்
எடுத்துட்டு வாங்க.
காதல்
படங்களில் நீங்கள் எப்படி
பூந்து விளையாடுவீங்கன்னு
தெரியும்.
இதுல
உங்க சோர்வுதான் தெரியுது.
வலுவற்ற
கதையை சுவரஸ்யமாக மூன்று
மணிநேரம் இழுக்க,
காட்சிகளும்,
சம்பவங்களும்
முக்கியமான ஒன்று.
ஐ யில்
அத்தகைய சுவரஸ்ய சம்பவங்களோ
காட்சி தோரணைகளோ இல்லை.
இருப்பினும்
அடுத்தது ஷாட் எப்படி இருக்கும்
என்ற கதையின் போக்கை மீறி
காட்சியின் மீது ஈர்ப்பை
ஏற்படுத்துகிறது ஒவ்வொரு
பிரேமும்
.
ஷங்கர்
என்றால் குட்டி குட்டி
ஐடியாக்கள்.
மெர்சலாயிட்டேன்
பாடலில் எமி ஜாக்சன் பலவிதமாக
உருமாறுவது அசத்தல் ஐடியா
எனினும் முந்தைய பல படங்களின்
பிரதிபலிப்பு தெரிகிறது.
பழிவாங்குகிறேன் பேர்வழி என்று வில்லனகளை எல்லோரையும் விகாரமாக்கி காண்பித்திருப்பது கொஞ்சம் டூ மச் ! குழந்தைகள் எல்லாம் அலறுகின்றன ஷங்கர் சார். இதுக்குதான் யு/ஏ ஆக்கிட்டாங்களோ ?
பழிவாங்குகிறேன் பேர்வழி என்று வில்லனகளை எல்லோரையும் விகாரமாக்கி காண்பித்திருப்பது கொஞ்சம் டூ மச் ! குழந்தைகள் எல்லாம் அலறுகின்றன ஷங்கர் சார். இதுக்குதான் யு/ஏ ஆக்கிட்டாங்களோ ?
திரைக்கதையின்
பாணி அரதபழசு.
எதிர்பாரத
ஒரு கடத்தல்.
ஏன்
கடத்துகிறான்,
எதற்காக
கடத்துகிறான் என்ற முடிச்சை
ஒவ்வொன்றாக சுவரஸ்யமாக
அவிழ்க்கவேண்டும்.
கடத்தல்
நிகழ்ந்தவினாடியே நம்மால்
கதையை யுகிக்க முடிகிறது.
Intercut ல்
கதை சொல்லும் பாணி கொஞ்சம்
வேகத்தை குறைக்கிறது.
எனினும்
ஒவ்வொரு பிரேமும் காட்சிப்படுத்தபட்டுள்ள
விதம் இதையெல்லாம் பூசி
மறைக்கிறது.
கதை
தான் ஒரு திரைப்படத்தின்
உயிர்நாடி,
அதுதான்
எனக்கு முக்கியம் என்பவர்களுக்கு
ஐ நிச்சயம் ஏமாற்றம்தான்.
ஒரு
மூன்று மணிநேரம் பொழுதுபோக்கிவிட்டு
வர விரும்புகிறேன் என்ற
மனோநிலையில் இருப்பவர்களுக்கு
நிச்சயம் ஐ ஏமாற்றம் தராது.படத்தின்
பிரமாண்டத்தையும்,
தொழில்நுட்ப
கூறுகளையும் பேசாமல் இருக்க
முடியாது.
சினிமா
யதார்த்ததின் பிரதிபலிப்பு
என்பது எத்தனைக்கு எத்தனை
ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்றோ
அதே போன்று அது மிகைப்படுத்தப்பட்ட
பேண்டஸி என்பதையும்
ஒப்புக்கொள்ளவேண்டும்.
மனித
மனம் விரும்பு அந்த பேண்டஸி உலகினில் நம்மை சஞ்சரிக்க
அழைத்து செல்கிறது ஐ யின்
பிரமாண்டம்.
அசத்தல்களையும் பொத்தல்களையும் விட்டுட்டு இப்படி யோசித்து பாருங்க.
டாம் குரூஸும் ஏஞ்சலினா ஜோலியும் நடிக்க இது ஹாலிவுட்டில் வெளியாகி இருந்தா என்ன சொல்லுவீங்க,
அசத்தல்களையும் பொத்தல்களையும் விட்டுட்டு இப்படி யோசித்து பாருங்க.
டாம் குரூஸும் ஏஞ்சலினா ஜோலியும் நடிக்க இது ஹாலிவுட்டில் வெளியாகி இருந்தா என்ன சொல்லுவீங்க,
அப்புறம்
இதை உண்மையில் ரசிக்கவேண்டும்
எனில் திருட்டு விசிடியிலோ
டிவியிலோ நிச்சயம் முடியாது.
தியேட்டரில்
அகன்ற திரையில்,
ஆரோ
டிஜிட்டலில் மட்டுமே முழுமையை
உணரமுடியும்.
எவ்வளவோ
செலவு பண்ணிட்டோம்.
பேஸ்புக்
டுவிட்டர் கமெண்ட் எல்லாவற்றையும்
புறம் தள்ளிவிட்டு ஒருமுறை
தியேட்டர்ல் போ பாருங்க.
“ ஐ”
will
appreciate you !
.
No comments:
Post a Comment